மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது.
இரு தரப்பு பேச்சு தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது யுத்த விமானங்களை அதிகளவில் குவித்து வருகின்து.
இந்நிலையில் ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்து கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரான் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.





