சீனா செல்ல முடியாது!!! கொழும்பு விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சீன பிரஜை
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கை வந்த போது பிடிபட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவரின் பலத்த பாதுகாப்புடன் இன்று மாலை 5 மணியளவில் சீனப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த சீன நபரை விமானத்தில் ஏறுவதற்காக கடைசி வாயிலுக்கு அழைத்து வந்த போது, மீண்டும் சீனாவிற்கு செல்ல முடியாது எனக் கூறி வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.





