இந்தியா

முழு அரச மரியாதையுடன் அஜித் பவாரின் உடல் தீயுடன் சங்கமம்!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது.

பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர்.

இறுதிச் சடங்கில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்று விழிநீருடன், துணை முதல்வருக்கு விடை கொடுத்தனர்.

அஜித் பவார் நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராமதிக்கு ‘லியர்ஜெட் 45’ என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார்.

விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உட்பட ஐவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!