செய்தி தமிழ்நாடு

விஜயின் சி.பி.ஐ. விசாரணை நிறைவு – தாமதத்திற்கு விஜய் கூறிய காரணம்

கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள் என அதிகாரிகள் த.வெ.க. தலைவர் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீதி வளைவுகள் காரணமாக கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. எழுப்பி உள்ளது.

இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

தமிழகத்தின் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்குண்டு
41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12 ஆம் திகதி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 அளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கேள்விகளுடன் 06
மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் அடுத்த நாளும் (13) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக
விஜய் தரப்பில் விசாரணையை வேறு திகதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில்
சம்மன் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.

விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் வீதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலையில் இருந்து விஜயிடம் 05 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

பெப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!