இலங்கை

தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் கிளர்ச்சி படையினர் தாக்குதல் – 04 பேர் படுகாயம்!

தாய்லாந்தில் கிளர்ச்சி படையினர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களான நாரதிவாட் (Narathiwat), பட்டானி (Pattani) மற்றும் யாலா (Yala) முழுவதும் 11 பெட்ரோல் நிலையங்கள் தீப்பிடித்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மலேசியாவின் எல்லையை ஒட்டியுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்கள் சுயாட்சிக்காக போராடி வருகின்றனர்.

இதன்காரணமாக 2004 ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!