ஐரோப்பா

UK கவுன்சில்களில் சைபர் தாக்குதல் – இலட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கலாம்!

கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியா (Chelsea) கவுன்சிலில் நடந்த சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள்  திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.

எதிர்பாராத அழைப்புகள், செய்திகள் மற்றும் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்,  பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்ட தரவின் சிறிய மாதிரிகள், அதில் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது என மேற்கு லண்டன் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கவுன்சில் ஊழியர் எனக் கூறி தனிப்பட்ட தரவுகளை கேட்பவர்கள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரவைக் கண்காணிக்க மூன்று நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பு கவுன்சிலுடன் சேர்ந்து இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழிகாட்டுதலுடன் கடிதம் அனுப்பியுள்ளனர். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்  கவுன்சில்கள் வெளியிட்ட தொடர்பு வழிகளைப் பன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!