இலங்கை செய்தி

இலங்கைக்கு தமிழகமும் நேசக்கரம்!

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இதற்கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த கப்பல் இன்று காலை வழியனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதின் ஆலோசனையின் படி, சென்னைதூதுவராக உள்ள டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்திய மத்திய அரசாங்கமும் அந்நாடு சார்பில் பல உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!