இலங்கையில் இதுவரை 355 பேர் மரணம்
நாட்டில் டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை வரை 334 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்ட புதிய தகவல்களின் படி 355 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




