உலகம்

இத்தாலியில் டென்னிஸ் போட்டியில் நடந்த துயரம் – இருவர் மைதானத்தில் மரணம்

இத்தாலியில் நடைபெற்ற ATP டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றின்போது இரு பார்வையாளர்கள் மாரடைப்பால் உயிரிழந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டி சில தினங்களுக்கு டூரின் (Turin) நகரில் நடைபெற்றது. அன்றையதினத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவைல இத்தாலிய டென்னிஸ் சம்மேளனம் உறுதி செய்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 78 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நெஞ்சு வலி ஏற்பட்ட போது இருவருக்கும் உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து டென்னிஸ் அரங்கிலிருந்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலிய டென்னிஸ், படேல் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!