திருவண்ணாமலை ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு! தீவிர சோதனையில் அதிகாரிகள்
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை பகுதியில் உள்ள பழமையான ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தபோது, ஒரு மண்பானையில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக NDTV ஊடகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், மூன்றாம் ராஜராஜ சோழன் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தன. இதன்போது, ஒரு மண்பானையில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மண்பானையில் இருந்த நாணயங்களைக் கண்ட ஆலய நிர்வாகம், உடனடியாக இதுதொடர்பாக காவல்துறையினரிடம் தகவல் அளித்தது.
சம்பவ இடத்தை சோதனையிட்ட அதிகாரிகள், நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, அவை ஏன் மண்பானையில் வைக்கப்பட்டன என்பது குறித்து தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.





