இந்தியா

திருவண்ணாமலை ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு! தீவிர சோதனையில் அதிகாரிகள்

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை பகுதியில் உள்ள பழமையான ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தபோது, ஒரு மண்பானையில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக NDTV ஊடகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், மூன்றாம் ராஜராஜ சோழன் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தன. இதன்போது, ஒரு மண்பானையில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மண்பானையில் இருந்த நாணயங்களைக் கண்ட ஆலய நிர்வாகம், உடனடியாக இதுதொடர்பாக காவல்துறையினரிடம் தகவல் அளித்தது.

சம்பவ இடத்தை சோதனையிட்ட அதிகாரிகள், நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, அவை ஏன் மண்பானையில் வைக்கப்பட்டன என்பது குறித்து தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

(Visited 7 times, 7 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!