ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்
பாலஸ்தீனப் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட காசா அமைதித் திட்டத்தை ஆதரிப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்தார்.
இருப்பினும், ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து இப்போது கவலைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இத்தகைய பின்னணியில் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் தான் முன்வைத்த திட்டங்களை நிராகரித்தால் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க தனது முழு ஆதரவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து எதிர்கால பாலஸ்தீன அரசுக்கான பாதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, அமெரிக்கா 20க்கும் மேற்பட்ட திட்டங்களை முன்வைத்தது.





