கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார்.
மரணமடைந்த சுரங்க வெல்லாலகே 54 வயதுடையவர். குடும்பத்துடன் நல்லுறவாக வாழ்ந்து வந்த அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தமை அவரது குடும்பத்தாருக்கு மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் வழியாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
சுரங்க வெல்லாலகேயின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)





