இலங்கை

இலங்கையில் சுயாதீன ஊடகவியலாளர் மீது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் தாக்குதல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட பிபிசி தமிழ் சேவை சுயாதீன ஊடகவியலாளர் யு. எல். மப்றூக், ”ஜூலை 2 .2025 அன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியா மசூர் உட்பட மூன்று பேர், தனது ஊடக அறிக்கையிடலைக் கேள்வி எழுப்பிய பின்னர், தன்னைத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக” அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊடகவியலாளரை தாக்கிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியா மசூர், கடந்த முறை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதிநிதியாகவும் இருந்ததாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் 100 சபை அமர்வுகளில் 40 இல் மாத்திரமே பங்கேற்றிருந்ததாகவும், இந்த விடயத்தை ஊடகங்களில் அறிக்கையிட்டதாகவும் யு. எல். மப்றூக் தெரிவிக்கின்றார்.

”அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரியா மசூர் தனது அரசியல் எதிரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த, ஜனநாயக விரோத செயற்பாட்டையும் தான் அறிக்கையிட்டதாக மப்றூக் கூறுகிறார்.”

தன்னைப் பற்றி இதுபோன்ற செய்திகளை எவ்வாறு வெளியிட முடியும் என கேள்வி எழுப்பி தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரியா மசூருடன் சேர்ந்து தன்னைத் தாக்கிய மற்ற இருவரும் மது போதையில் இருந்ததாக அக்கரைப்பற்று பொலிஸில் செய்த முறைப்பாட்டில் யு. எல். மப்றூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் ஆகியோரின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். உவைஸ் ஜூலை 2 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ரியா மசூர் உள்ளிட்ட மூன்று பேர் தான் தாக்கப்பட்டபோது, தன்னைக் காப்பாற்றியது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். உவைஸ் தான் என ஊடகவியலாளர் மப்றூக் தனது தொழில்முறை சகாக்களிடம் கூறியுள்ளார்.

ஏனைய ஊடகவியலாளர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி யு.எல். மப்றூக் பெற்ற தகவல்களை தங்கள் செய்திக்கு ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content