கொழும்பு புறநகர்ப் பகுதி மக்களுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு புறநகர்ப் பகுதிகளான கட்டான வடக்கு வலயத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பம்புகுளிய, முருத்தான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரிய, தோப்புவ, கலுவாரிப்புவ மேற்கு, மேல் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிக்கண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹ எத்கால மற்றும் கலுவாரிப்புவ கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
(Visited 1 times, 1 visits today)