ஆசியா

மலேசியாவில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி மோசடி : விசாரணைகள் ஆரம்பம்!

சில ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து பிறகு அவர்களை வேலையின்றி தவிக்கவிடும் சம்பவங்கள் மலேசியாவில் அரங்கேறி வருகின்ற நிலையில், இது குறித்து அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி  தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியேறிகள் மலேசியாவில் வேலையின்றித் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டிருந்தது.

அவர்களில் பெரும்பாலோர் பங்ளாதேஷையும் நேப்பாளத்தையும் சேர்ந்தவர்களாவர்.  அதிகமான தொகையை ஆட்சேர்ப்புக் கட்டணமாகச் செலுத்தி அவர்கள் மலேசியாவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பின்பே குறித்த தகவலை அறிந்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரங்கள் குறித்து மலேசிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மோசடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் சிலரை அரசாங்க வசிப்பிடங்களில் தங்கவைத்திருப்பதாகவும் அவர்களின் தங்குமிடச் செலவையும் சம்பளத்தையும் வழங்கும்படி சில நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தொழிலாளர் துறை குறிப்பிட்டது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!