இலங்கை: அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் எண்ணம் இல்லை: மருத்துவர் ராமநாதன் அர்ச்சுனா

அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் எண்ணம் இல்லை என சர்ச்சையின் மையத்தில் இருந்த யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று தெரிவித்துள்ளார்.
“எனக்கு அரசியலை ஒருபோதும் பிடிக்கவில்லை. 30 வருடங்களுக்கு மேலாக நான் வாக்களிக்கவில்லை. எனவே, நான் நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்பவில்லை” என்று எம்.பி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)