இலங்கையில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் தற்போதுள்ள மழை நிலைமை மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும். மற்ற சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 13 times, 1 visits today)