ஆசியா

பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வாயுவெடிப்பு; நான்கு தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சஞ்சிதி பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27 மணிநேரத்திற்கும் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட இந்த பணியில், இதுவரை 4 பேரின் உடல்களை மீட்பு குழு மீட்டுள்ளது. 3,000 அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்க கூடும் என நம்பப்படுகிறது. பலூசிஸ்தானில் ஹர்னாய் பகுதியில், இதேபோன்றதொரு சம்பவம் கடந்த 2024ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்டது. இதில் சுரங்க தொழிலாளர்கள் 18 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்