ஆசியா

பாகிஸ்தானில் கட்டுமான தொழிலாளர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் – ஐவர் பலி !

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பஞ்குவார் மாவட்டம் பிரெமு என்ற பகுதியில் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அணை கட்டும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு இன்று சில பயங்கரவாதிகள் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த கட்டுமான தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை, தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான பயங்கரவிதாகளை தேடி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!