இலங்கை

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்! மட்டக்களப்பு சீயோன் தேவாலய பகுதியில் இருவர் கைது

பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதால் தென்னிலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அறுகம் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் தொடர்பான இந்த எச்சரிக்கையானது, “சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளை மையமாகக் கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய தற்போதைய தகவலிலிருந்து” உருவானது என்று தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேகத்திற்கிடமான முறையில் நடனடமாடிதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!