ஐரோப்பா செய்தி

நீர் நிலைகள் குறித்து எச்சரிக்கும் புதிய ஆய்வு

ஐரோப்பாவின் மேற்பரப்பு நீரில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரம் ஆரோக்கியம் அல்லது பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுபாடு, வாழ்விட சீரழிவு, காலநிலை மாற்றம் மற்றும் நன்னீர் வளங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை ஐரோப்பா நீர் நிலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (EEA) செவ்வாய்க்கிழமை (15) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

ஐரோப்பாவின் நீரின் ஆரோக்கியம் நன்றாக இல்லை. ஐரோப்பாவின் நீர் பாதுகாப்பு அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளதாக EEA நிர்வாக பணிப்பாளர் லீனா யலா-மோனோனென் அறிக்கையில் குறிப்பிட்டார்.

EEA தொகுத்துள்ள 19 உறுப்பு நாடுகளின் தரவுகளின்படி, ஐரோப்பாவின் மேற்பரப்பு நீர்நிலைகளில் 37 சதவீதம் மட்டுமே சிறந்த சுற்றுச் சூழல் ஆரோக்கியத்துடன் உள்ளது.

இதற்கிடையில், 2015-2021 காலகட்டத்தில் 29 சதவீத மேற்பரப்பு நீர் மட்டுமே சிறந்த இரசாயன நிலையை கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

சிறந்த இரசாயன நிலை என்றால், இரசாயன ஊட்டச்சத்துக்கள் மற்றும் PFAS மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் போன்ற நச்சுப் பொருட்களிலிருந்து தண்ணீர் அதிகப்படியான மாசுபாடு இல்லாமல் உள்ளமை ஆகும்.

(Visited 41 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!