ஐரோப்பா

பிரித்தானியாவில் தவறான விமானத்திற்குள் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி

பிரித்தானிய மென்செஸ்ட்டர் விமான நிலையத்தில் தவறான விமானத்துக்குள் ஏறிய பயணி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

கூடுதல் பாதுகாப்புச் சோதனைக்காக விமானத்திலிருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு அவர்களிடம் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

EasyJetஇன் மற்றொரு விமானத்தில் ஏறவேண்டிய அந்தப் பயணி தவறுதலாக மிலானுக்குச் செல்லும் விமானத்தில் ஏறினார். மிலான் செல்வதாகக் காட்டும் உரிய ஆவணங்களை அவர் வைத்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. இதையடுத்து அச்சம்பவம் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டதில்லை என்பது உறுதியானது.

ஆனாலும் உரிய அனுமதியின்றி விமானத்தில் ஏறியது, வேண்டுமென்றே அல்லது அலட்சியத்தால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக அந்த 20 வயது நபர் கைதுசெய்யப்பட்டார்.

தடுப்புக்காவலில் இருக்கும் அவர் விசாரணை செய்யப்படுகிறார்.

(Visited 13 times, 13 visits today)
See also  50 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலாந்தில் இறப்பு வீதம் அதிகரிப்பு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content