ஆசியா

இந்தோனீசியாவில் இணைய சூதாட்டத்திற்காக கைக்குழந்தையை விற்ற தந்தை- கைது செய்த பொலிஸார் !!

இந்தோனீசியாவின் மேற்கு ஜகார்த்தாவில் உள்ள தங்கெராங் பகுதியில், 15 மில்லியன் ரூப்பியாவுக்கு ($955 அமெரிக்க டொலர்) இணையத்தில் தனது 11 மாதக் கைக்குழந்தையை விற்ற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஆர்ஏ’ என்று அடையாளம் காணப்பட்ட அந்த 36 வயது நபர், கிடைத்த பணத்தை இணையச் சூதாட்டத்துக்கும் தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆள்கடத்தல் கட்டமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால், குழந்தையை வாங்கியவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் முதன் முறையாக அக்டோபர் 1ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்தது. கலிமாந்தானில் வேலைசெய்து திரும்பியபோது, குழந்தையின் தாயாரால் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கணவரிடம் குழந்தையைப் பற்றிக் கேட்டபோது, அவர் இறுதியில் குழந்தையை விற்றுவிட்டதாகக் கூறியதாய் தங்கெராங் சிட்டி மெட்ரோ காவல்துறைத் தலைவர் ஸேன் டுவி நுகுரோஹொ கூறினார்.

காவல்துறை விசாரித்தபோது, நிதிச் சுமையைக் குறைப்பதற்காக குழந்தையை விற்றதாக ‘ஆர்ஏ’ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அந்தப் பணத்தை இணையச் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தியதாக காவல்துறை கூறியது.

See also  இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹமாஸ் அமைப்பு

இந்நிலையில், இந்தோனீசியக் குழந்தைப் பாதுகாப்பு ஆணையம் அந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content