இலங்கை

இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கை முழுவதும் சகல விதமான துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தற்காலிகமாக மீண்டும் பெற்றுக் கொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்காப்புக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் ஒப்படைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொளள்ளப்பட்டுள்ளது.

பரிசீலனை நடவடிக்கைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தேவைப்பாடு என்பன குறித்து ஆராய்ந்ததன் பின்னர் துப்பாக்கிகள் அந்தந்த நபர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்காக வழங்கப்படும் தோட்டாக்கள் என்பவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வெலிசர பகுதியில் உள்ள இலங்கை கடற்படையின் அரச வெடிமருந்து களஞ்சியசாலையில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தவறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கும் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் என்பவற்றுக்காகப் பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை இவ்வாறு மீண்டும் கையளிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!