பிரித்தானியாவில் நாய் தாக்குதல் : ஒருவர் படுகாயம் -பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

பிரித்தானியா – ஷெஃபீல்டில் இரு நாய்கள் தாக்கியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது போன்ற நாய்களை வைத்திருப்பவர்கள் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாஸ்டிஃப் மற்றும் கேன் கோர்சோ என்று கருதப்படும் இரண்டு நாய்கள் மேற்படி தாக்குல்களை நடத்தியதாக நம்பப்படுகிறது.
47 வயதுடைய நபரின் உடலில் ஆழமான வெட்டுக்கள் மற்றும் துளையிடப்பட்ட காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சவுத் யார்க்ஷயர் காவல்துறை கூறியுள்ளது.
(Visited 37 times, 1 visits today)