ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு – பொலிஸாரை தாக்கிய நபர் சுட்டுக்கொலை

தெற்கு அவுஸ்திரேலியாவின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதோடு, நபர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அடிலெய்டில் இருந்து வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஸ்டல் புரூக் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காயமடைந்தவர்களைக் கொண்டு வர ஹெலிகாப்டரும் மருத்துவ உதவிகளை ஏற்றிச் சென்றது.
பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் கிடைத்து வருவதாக தெற்கு அவுஸ்திரேலிய மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)