மத்திய கிழக்கு

லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர் கருவிகள் – 8 பேர் பலி – 2,750 பேர் படுகாயம்

லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர் கருவிகளால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.

இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 2,750 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினர் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலங்கள் அதிகமாகச் சூடேறியதால் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனவும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content