இலங்கை செய்தி

யாழில் நாய்க்கு இறுதிக்கிரியை செய்து , உடல் நல்லடக்கம்

கடந்த பத்தாண்டு காலமாக தனது வீட்டினை காவல் காத்து வந்த நிலையில் உயிரிழந்த பைசா என அழைக்கப்படும் நாய்க்கு , வீட்டின் உரிமையாளர் இறுதிக்கிரியை செய்து , உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம் திகதி பிறந்த பைசா என பெயர் சூட்டப்பட்ட நாய்க்குட்டியை அதனது 08ஆவது வயதில் இருந்து, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வளர்த்து வந்துள்ளார்.

கடந்த பத்தாண்டு காலமாக பைசாவை அவர் வளர்த்து வந்துள்ளார். அந்நிலையில், கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த பைசா நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளது.

அதனை அடுத்து , பிரேத பெட்டி ஒன்றில் பைசாவை வைத்து , வீட்டில் அஞ்சலிக்காக வைத்திருந்தார். வீட்டார் , அயலவர்கள் என பைசாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பைசாவின் உடலை, பாண்ட் வாத்தியங்கள் முழங்க காரில் ஊர்வலமாக எடுத்து சென்று, உரிமையாளரின் காணியில் பைசாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!