இலங்கை செய்தி

இலங்கையில் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

 

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம்மெத்த பகுதியில் மனைவி கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் உடகம்மெத்த, கொமகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, மனைவி இரும்புக் கம்பியால் கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 56 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content