இலங்கை

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று (6) காலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று, மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் இருபது இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இதன்படி, மீட்கப்பட்ட இலங்கையர்கள் தாய்லாந்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் இன்று பாதுகாப்பாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை மியான்மரில் உள்ள தொடர்புடைய சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் 34 இலங்கை பிரஜைகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!