இத்தாலியில் கொள்ளையடிக்க முயன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி

இத்தாலியில் கொள்ளையடிக்க முயன்ற இலங்கையர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 32 வயதான இலங்கையர் ஒருவர் வெட்டுக்காயத்துடன் பெல்லெக்ரினியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், விகோ டெசிடோரியில் அவர் தோல்வியடைந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த இளைஞருக்கு ஏற்பட்ட காயம் சிறியது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
(Visited 21 times, 1 visits today)