இலங்கை

இலங்கையில் மீண்டும் வரிசையுகம் உருவாகும் : தமிழர் பகுதியில் ரணில் கருத்து!

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள தந்திரோபாய வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவில்லையென்றால், மேலும் ஒரு வரிசை யுகத்தை நாம் சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வல்லுனர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பது சகல தொழில் வல்லுனர்களினதும் பொறுப்பாக இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், மகளிர் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பெருந்திரளான மக்கள் திரண்டு வந்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!