மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்

லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தடுக்குமாறு அமெரிக்காவிடம் லெபனான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் போர் விரிவாகும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் லெபனான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)