வட அமெரிக்கா

அமெரிக்காவை புரட்டி போட்ட ‘பெரில்’ புயல்; எட்டுப் பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தென்பகுதியில் ‘பெரில்’ புயல் காரணமாக குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்த் விட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் காரணமாகப் பல மரங்கள் வேருடன் சாய்ந்ததுடன் வெள்ளம் கரைபுரண்டோடியது.

இந்நிலையில், புயலின் சீற்றம் சற்று குறைந்திருப்பதாக ஜூலை 9ஆம் திகதியன்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும், புயல் காரணமாக மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் மில்லியன்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரியவந்துள்ளது.கடும் வெப்பத்தில் அவர்கள் அவதிப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மெக்சிகோ வளைகுடாவில் மையம் கொண்டு அமெரிக்கா நோக்கி விரைந்த ‘பெரில்’ புயல் ஜூலை 8ஆம் திகதி காலை டெக்சஸ் மாநிலத்தில் கரையைக் கடந்தது.

இதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தாகவும் பக்கத்து மாநிலமான லுவிசியானாவில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

(Visited 48 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!