ஆசியா

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் போது 350,000க்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் மதிப்பு 6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகும். மின்-சிகரெட்டுகள் Telegram செயலியில் விற்பனைக்கு விடப்பட்டிருந்ததாகச் சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் செயல்பட்ட மிகப் பெரிய மின்-சிகரெட் விநியோகக் கட்டமைப்புகளில் அதுவும் ஒன்றாகும்.

சென்ற மாதம் 14ஆம் திகதிக்கும் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உட்லண்ட்ஸ் லூப், உட்லண்ட்ஸ் தொழிலியல் பூங்கா போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கிடங்குகள் சிலவற்றிலும் கூட்டுரிமை வீடுகள் சிலவற்றிலும் மின்-சிகரெட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

34 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட 4 பேர் விசாரணையில் ஒத்துழைக்கின்றனர். அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்களாகும்.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து சிங்கப்பூரில் 18 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பெறுமானமுடைய மின்- சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!