சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 33 times, 1 visits today)