இலங்கை

இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

இலங்கையில் வெலிப்பன்ன பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியை தலைக்கவசத்தால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குள் இரு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை கட்டுப்படுத்தச் சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும்  முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

இவர்களது முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே இருவரிடயே  சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது  அவர்களை அடக்க முயன்ற  பொலிஸ் பொறுப்பதிகாரி மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் மத்துகம உபில்கம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்