துருக்கியில் மோசமான வானிலையால் நேர்ந்த விபரீதம் : 10 பேரை பலி கொண்ட விபத்து!

துருக்கியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேற்று (26.05) இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தானது இரண்டு கார்கள் மற்றும் ஒரு டிரக் மீது மோதி விபத்துகுள்ளாகியது. இதில் காயமடைந்த 39 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)