இலங்கை செய்தி

பதவிய ஓமரகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

பதவிய ஓமரகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமரகட, பதவிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

இதன் தாக்குதலில் குறித்த நபரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவரின் அருகில் வசிக்கும் 19 வயதுடைய மீனவ இளைஞரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content