ஆசியா செய்தி

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஒருவர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்புகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தின் டுக்கி மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றப்பட்ட டிரக் கண்ணிவெடியில் மோதியதில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இரண்டாவது குண்டுவெடிப்பு ரிமோட் கண்ட்ரோல் சாதனத்தால் இடம்பெற்றது.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!