இந்தியா

ஆந்திரா- தேரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்தில் 13 குழந்தைகள் படுகாயம்!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் யுகாதியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

தெலுங்கு புத்தாண்டான உகாதி தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள டெக்கூர் கிராமத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

அப்போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் தேர் உரசி 13 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கர்னூலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதி

இந்த சம்பவம் தொடர்பாக கர்னூல் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், “இன்று காலை யுகாதி உற்சவம் கொண்டாட்ட நிறைவு விழாவின்போது மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். மருத்துவர்கள் தகவல்படி, அனைவரின் தீக்காயங்களும் 10 சதவீதத்துக்கும் குறைவான தீவிரத்தன்மை கொண்டவை. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், பன்யம் எம்எல்ஏ-வுமான கடசானி ராமபூபால் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நந்தியாலா தொகுதி வேட்பாளர் பைரெட்டி ஷபரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த குழந்தைகளை சந்தித்தனர். அப்போது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

தேரில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content