இந்தியா

சூடுப்பிடிக்கும் கச்சதீவு விவகாரம்! இந்தியாவுடன் பேச்சு வார்த்தை தேவையில்லை: இலங்கை அதிரடி

கச்சதீவு விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட ஒரு விடயம் என்பதால் அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கச்சதீவு விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் ஆட்சியின் போது, இலங்கைக்கு இந்தியா, கச்சதீவினை தாரைவார்த்திருந்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலுக்கு அமைய, சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்தனர்.

அதனை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய தரப்பினரும் மேற்கோள்காட்டி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் ஆட்சியை விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, குறித்த விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட விடயம் என்பதால், அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!