சோமாலியா கடற்கொள்ளையர் அச்சுறுத்தல்: இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை

இந்த நாட்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில் உள்ள மீனவ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை (16) அரபிக்கடலில் ஈரானிய மீன்பிடி படகை ஆயுதமேந்திய சோமாலிய குழு கடத்திய சம்பவம் தொடர்பான செய்திகளின் விளைவாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனை கூறியுள்ளார்.
ஈரானிய கப்பலுடன் குறித்த கடற்பரப்பிற்கு கடற்கொள்ளையர் குழுவொன்று வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)