இலங்கை

பனலிய பிரதேசத்தில் ஆட்டோ சாரதிக்கு கத்திக் குத்து – பணம் கொள்ளை!

கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சாரதியை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) பிற்பகல் எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வாடகை வண்டி சாரதியுடன் திவியகஹவெல பிரதேசத்திற்கு செல்வதற்காக குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணி அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் சாரதியை தாக்கி கத்தியால் காயப்படுத்தி அருகில் உள்ள காணிக்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் சட்டையையும் கிழித்த சந்தேகநபர்கள் தப்பியோடிய பின், சாரதியின் வீதிக்கு வந்து அங்கு பயணித்த ஒருவரிடம் சம்பவத்தை கூறியுள்ளனர்.இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த நபர் எல்பிட்டிய, கம்பட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!