வவுனியாவில் 8000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அடையாளம்!
வவுனியா மாவட்டத்தில் சுமார் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட முன்முயற்சிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்களை ஆதரிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இதன்படி 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான மேம்பாட்டு முயற்சிகளை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
மற்றும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.





