இலங்கை செய்தி

மோசமான வானிலையால் 66,906 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

அனர்த்தத்தினால் 13 மாவட்டங்களில் 66,906 குடும்பங்களைச் சேர்ந்த 253,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், களுத்துறை மாவட்டத்தில் 02 பேர், காலி மாவட்டத்தில் 03 பேர், கம்பஹா மாவட்டத்தில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்தம் காரணமாக 4303 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் 42 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

2,565 குடும்பங்களைச் சேர்ந்த 10,737 பேர் 154 பாதுகாப்பான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!