இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இன்றையதினம் ஜெனிவா பயணமாகவுள்ளது.

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசேட அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதிவரை மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கலந்து கொள்ளவுள்ளது.

இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேச மட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு இந்த அறிக்கை அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

(Visited 2 times, 2 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை