செய்தி

உருகும் பனியால் வெளிவரும் 5000 ஆண்டு பழைமையான பாக்டீரியா : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

ருமேனியாவில் உள்ள ஒரு பழங்கால பனிக்கட்டி குகையில் இருந்து 5,000 ஆண்டுகள் பழமையான பாக்டீரியா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பழங்கால பாக்டீரியா திரிபு 10 வெவ்வேறு நவீன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது. குறிப்பாக கடுமையான தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்பை காட்டியுள்ளது.

இந்நிலையில் உருகும் பனியால் இந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டால், அவற்றின் எதிர்ப்பு மரபணுக்கள் வேகமாக  பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் உலகளாவிய சவாலை அதிகப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஃபிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜியில் (Frontiers in Microbiology) வெளியிடப்பட்டுள்ள  இந்த ஆய்வில், 25 மீட்டர் பனி மையத்தை துளையிட்டு, பாக்டீரியாவின் மரபணுவை வரிசைப்படுத்தி அதன் தன்மையை ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!