இலங்கை

வெளிநாடு ஒன்றில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் மிளவும் நாட்டுக்கு

குவைட்டில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

நாடு திரும்ப முடியாத நிலையில் நீண்டகாலமாக சிக்கியிருந்தவர்களே இவ்வாறு அனு்பபி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக விமான அனுமதி பத்திரத்தின் கீழ் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி காலை 06.16 அளவில் ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் விமானம் ஊடாக அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் 3 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி குவைட்டிலிருந்து 33 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் 64 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்