அமெரிக்காவில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 27 வயது இந்தியப் பெண்
புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த 27 வயது இந்தியப் பெண் ஒருவர் மேரிலாந்தில்(Maryland) உள்ள தனது முன்னாள் காதலனின் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் எலிகாட்(Ellicott) நகரத்தைச் சேர்ந்த தரவு மற்றும் மூலோபாய ஆய்வாளரான(data and strategy analyst) நிகிதா கோடிஷாலா(Nikita Godishala) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹோவர்ட்(Howard) கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் உடல் அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மாவுக்குச்(Arjun Sharma) சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டி புலனாய்வாளர்கள் பிடியாணை பெற்றுள்ளனர்.





